Thursday 25 December, 2008
புத்தாண்டு வாழ்த்துக்கள்
2009ஆம் ஆண்டு விரைவில் பிறக்க இருக்கிறது. புத்தாண்டு பிறப்பை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் போதும் இந்த ஆண்டாவது எல்லாருக்கும் நல்லவிதமாக அமையாதா? என்ற ஆசை அனைவருக்குமே தோன்றத்தான் செய்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான நிகழ்வுகளை நமக்குத் தந்துவிட்டே செல்கிறது. சென்ற ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் நடந்த விபத்து இன்னும் கண்ணில் நிற்கிறது. காவல் துறையினர் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல நிபந்தனைகள் விதித்து வருகின்றனர். அதை ஒழுங்காக கடைப்பிடித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே குடியும் கும்மாளமுமாகத்தான் கொண்டாட வேண்டுமா?சேவையுள்ளம் கொண்டோருடன் இணைந்து அன்னதானம் செய்வது, மரக்கன்றுகள் நடுவது, கண்தானம், ரத்த தானம் பற்றிய பரப்புரைகள் செய்வது, கவிராத்திரி நடத்துவது, நகைச்சுவை கிளப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று எவ்வளவோ மகிழ்ச்சியான வழிகளில் ஏதேனும் ஒன்றிணை மேற்கொள்ளலாம். அதை விடுத்து அன்னிய நாடுகளை பின்பற்றி நாமும் குடி, கூத்து என கும்மாளமிட்டு, சிலர் போதை மிகுதியால் விழுந்து அடிபட்டு இறந்து போவதும், சிலர் கை, கால்களில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் தேவையா?நீங்கள் சிரித்தால் பக்கத்தில் இருப்பவர்களின் முகத்திலும் சிரிப்பு பற்றிக் கொள்ளும். இந்த ஆண்டு புன்னகை பூக்கும் புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்!
Friday 19 December, 2008
தர்ம சிந்தனை
Saturday 13 December, 2008
துரித உணவும் பிரபுதேவாவும்
Monday 8 December, 2008
தமிழின் நவீன சூழலும் புதிய பாதைகளும்
கட்டுரை: எஸ்.வைத்தீஸ்வரன்
Sunday 7 December, 2008
மீண்டும் காதலிப்பேன்...
தபால்காரர் விட்டெறிந்துவிட்டுவிட்டுப் போன தபால்களை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தமர்ந்தான் ராஜா. ஒவ்வொன்றாக புரட்டிப்பார்த்துக் கொண்டு வந்தவன், கல்யாணப்பத்திரிகையை கண்டதும் அதிர்ந்தான். மணமக்கள் சாந்தி, கணேஷ்... என்றிருந்தது. சாந்தி என்ற பெயரைப் பார்த்ததும், பரபரப்பாகி பத்திரிகையை பிரித்தவன் உள்ளே மணமக்கள் புகைப்படத்தைக் கண்டதும், பத்திரிகையை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினான். அங்கே சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அசோக்கின் சட்டையைப் பிடித்து இழுத்து, அவன் முகத்துக்கெதிரே பத்திரிகையை நீட்டினான்.
"என்னடா இது.... என்னாச்சு உங்களுக்குள்ளே...'' என்று அதட்டினான்.
"எல்லாம் முடிஞ்சிடுச்சு...'' என்றவாறு முகத்தை திருப்பிக் கொண்டான்."எல்லாமேன்னா.... என்ன அர்த்தம்.... நீங்க காத-ச்சது எல்லாம் அவ்வளவுதானா... சே... நீ என் நண்பன்னு சொல்லவே வெட்கமா இருக்கு... நீ எதுவும் பேசவேணாம். இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நான் பார்க்கிறேன்...'' என்றவாறு திரும்பியவனை அசோக் தடுத்து நிறுத்தினான்.
"இரு ராஜா.... அவசரப்படாதே... கல்யாணம் நல்லபடியா நடக்கனும். நீ என் நண்பன்னா எந்தவித இடைஞ்சலும் செய்யமாட்டேன்னு சத்தியம் பண்ணு...'' என்றவாறு கையை நீட்டினான்.
"எதுக்குடா சத்தியம் பண்ணணும்.... உன்னை காத-ச்சுட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ சந்தோஷமா இருப்பா. நீ தாடி வளர்த்துக்கிட்டு தேவதாசா திரிவியா...
"இந்த கல்யாணத்துக்கு அவளை சம்மதிக்க வைச்சதே நான்தான்டா....''"என்னடா சொல்ற... ''
"ஆமா ராஜா... ஏதோ இளமை வேகத்துல நாங்க காத-க்க ஆரம்பிக்கல. எனக்கு பிடிச்ச எல்லாமும் அவளுக்கும், அவளோட எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாம் எனக்கும் எவ்வளவோ ஒத்துப்போச்சி. அதுவே அவ மேல ஒரு ஈர்ப்பை உண்டாக்குச்சி. ஆனா கல்யாணம்னு வரும்போது.... ஒத்துவரலடா... எனக்கு கீழே ஒரு தங்கை இருக்கிற மாதிரி, அவளுக்கும் ஒரு தங்கை இருக்கா. எனக்கு இன்னமும் சரியான வேலை அமையல இந்த நேரத்தில அவங்க வீட்ல கல்யாணப்பேச்சை எடுப்பாங்கன்னு நாங்க எதிர்பார்க்கலை. அவளுக்கு சீக்கிரம் முடிஞ்சாதான் அவ தங்கைக்கு வரன் தேட முடியும்கிறதால அவங்க வீட்ல எடுத்த முடிவை எங்களால தடுக்க முடியலை. தண்டச்சோறு பட்டம் வாங்கிட்டு திரியுற என்னால என்ன செய்யமுடியும்.. எங்க காதல்தான்னு பெரிசுன்னு சுயநலம் எங்களுக்குள்ளே ம-ஞ்சகிடந்தா, நாங்க ஊரைவிட்டு ஓடிப்போயிருப்போமோ என்னவோ.... ஆனா நல்ல குடும்ப சூழ்நிலையிலே பாசத்தில வளர்ந்த எங்களுக்கு எங்க ரெண்டு குடும்பத்தையும் எதிர்க்க தோணலை... எங்களோட காதலால எங்களோட தங்கைகளோட வாழ்க்கை கேள்விக்குறியா மாற நாங்க காரணமா இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணோம். அதனால மனசொத்து பிரிஞ்சிட்டோம். அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா நிச்சயம் அவளையே கல்யாணம் செய்துக்க அந்த ஆண்டவன் ஒத்துழைப்பான்னு நம்பிக்கையோட இருக்கேன்...'' என்றவாறு கண்களில் வழியும் நீரைக் கட்டுப்படுத்த முயன்றான்.
"அழுடா.... நல்லா அழு... உன் சோகம் நெஞ்ச விட்டு போறவரைக்கும் அழுது தீர்த்திடு. உன்னையும் சாந்தியையும் தப்பா நினைச்சுட்டேன். என்னை மன்னிச்சிடுடா. அடுத்த ஜென்மம் உனக்காக நிச்சயம் இருக்கனும்டா... அப்பவும் உன் நண்பனாவே நானும் பிறக்கனும்டா...'' என்றவாறு அசோக்கை இழுத்து அணைத்துக் கொண்டான் ராஜா.