Thursday, 5 March 2009

மகளிர் தின கவிதையும், கூடவே எனது குசும்பும்.

அனைத்து உலக மகளிர்க்கும் மகளிர் தின வாழ்த்துகள்! உலக மகளிர் தினத்தை முன்னிட்டு என் நண்பனின் கவிதை. எல்லோரும் தங்களின் மனைவி்யை பற்றி இப்படி யோசித்திருப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான்?!

பால் வண்டிச் சப்தத்தில்
விழித்துக் கொள்கிறது
மனைவியின் காலை.

முற்றத்தில் குவித்த
பாத்திரங்களைக்
துலக்குதல் தொடங்கி...

பள்ளிக்கு செல்லும்
மகனின் கையசைப்பு வரை
தீவிரப்படும்
அவளின் சுழற்சி.

இருப்பதைக்கொண்டு
பகல் உணவுமுடித்தவளை
மலைக்க வைக்கும்
அவிழ்த்தெறிந்த
முந்தைய அழுக்குகள்...

மல்லுக்கு நின்றபின்
மறுபடி செல்வாள்
அடுக்களையுத்தத்திற்கு.

இரவில்
எல்லாம் முடிந்ததென
எடுத்து வைப்பாள்
கொட்டாவி விட்டபடி

காலை முதல்
இரவு வரை-

அடுக்களையில் உழன்றவளை
அணைக்கத் தொடுகையில்
கூசுகிறது மனசு.

- கோ. பாரதிமோகன், கும்பகோணம்.


மேற்கண்ட கவிதை நடுத்தர வர்க்கத்தினரிடையே நடைபெறும்.
மேல்தட்டு மக்களிடையே எப்படி நடைபெறும் என்பது பற்றிய எனது குசும்பு கீழே...
காலையில எந்திரிச்சு,பாத்திரம் விளக்கி, காபி போட்டு, பிள்ளைகளை குளிபாட்டி, சாப்பிட வைச்சு, அவருக்கு டிபன் எடுத்து அனுப்பி, துணிகளை துவைச்சு...ஸ்... டயடா எனக்கா... நெவர்... ஏன்னா, எல்லா வேலையும் சமையற்காரிதானே செய்றா! (இது எப்படி இருக்கு!)

Wednesday, 4 March 2009

உங்கள் நண்பரின் பதிவை தவற விடுபவரா நீங்கள்?

'கற்றது கை மண்ணளவு' அப்படின்னு சொல்வாங்க. வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் கண்ணைக்கட்டி காற்றில் விட்டது போலிருந்தது. வலைத்தளம் ஆரம்பிக்கவே நிறைய பயிற்சிகள் செய்தேன் என்பது வேறு விசயம். பின்பு பலரின் வலைத்தளங்களுக்கு சென்று பல புதிய விடயங்களை கற்றுக் கொண்டேன். அதுபோல் எனக்கு தெரிந்ததை இங்கு உங்களுக்கு சொல்கிறேன். இது பலருக்கும் தெரிந்திருக்கலாம். அவர்களுக்காக அல்ல... என்னைப்போல் அறிந்துகொள்ள ஆர்வமுள்ள, ஆனால் வழி தெரியாதவர்களுக்காகவே இப்பதிவு!விரும்பி வாசிக்கும் சில வலைத்தளத்திற்கு நீ்ங்கள் பாலோவராகவும் ஆகியிருப்பீர்கள். அப்படி ஆகியிருப்பவர்கள், அவர்களின் வலைத்தளத்தில் புதிய பதிவு போடுவதை எப்படி அறிவீர்கள்?அவரின் வலைத்தளத்திற்கு சென்று பார்போம்! இதென்ன புதுசா கேட்கிறே?என்று என்னை முறைக்காதீர்கள்!அவர்களின் வலைதளத்திற்கு சென்றுதான் பார்ப்பேன் என்பது உங்கள் பதிலாக இருக்குமென்றால், இனி அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தினந்தோறும் உங்கள் வலைத்தளத்திற்கு தவறாது வருகை புரிவீர்கள் தானே அப்புறமென்ன!உங்கள் வலைத்திலிருந்தே (அங்கு சென்று பார்க்காமலேயே) புதிய பதிவு போடப்பட்டிருக்கிறதா? என்பைத அறிய எளிய வழி உள்ளது.முதலில் உங்கள் வலைத்தளத்திற்கு சென்று, டேஸ்போர்டை திறந்துகொள்ளுங்கள். ஆட்கெஜட் பகுதியை கிளிக் செய்க. அதில், பிளாக் லிஸ்ட் என்பதில் க்ளிக் செய்க.
தோன்றும் பகுதியில் தலைப்பில் உங்களுக்கு விருப்பமான தலைப்பை (உ.தா= நண்பர்களின் வலைத்தளம்) கொடுத்து, அதில் கேட்கப்பட்டிருப்பதில் உங்களுக்கு விருப்பமான ஆப்சனை தேர்ந்தெடுத்துக்கொண்டு, ஆட்லிஸ்ட் என்பதை க்ளிக் செய்யு்ஙகள்.
கீழே உள்ளதுபோல் தோன்றும். அதில் நான் பின்தொடரும் அனைத்தும் என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பின்பு ஆட் செய்யுங்கள். அதன்பிறகு கேட்கும் கேள்விகள் உங்கள் விருப்பத்திற்கு மாற்றம் செய்து கொள்ளுங்கள். பிறகு சேவ் செய்க. பிறகு லேவுட் பகுதி தோன்றும். அங்கு சேவ் செய்துகொண்டு, உங்கள் வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.

இப்போது உங்கள் விருப்பமானவர்களின் வலைதளத்ததில் ஒரு புதிய பதிவு இடப்பட்டால் உங்கள் வலைத்தளத்திலிருந்து பார்த்து, உடன் அந்த தளத்தை க்ளிக் செய்து உடன் பின்னூட்டமிட்டு கலக்கலாம். தவறவிடமாட்டீர்கள், இனி!உங்கள் நண்பரும் மகிழ்வார்! இதற்கு பின்னூட்டமிட மறந்துவிடாதீர்கள்!



Sunday, 1 March 2009

அரிசி தவிட்டிலிருந்து நெய் கிடைக்குமா? சுப்பனின் ஆராய்ச்சி.

நம்ம கதையின் நாயகன் சுப்பன். முதல் இவனோட பாத்திரப்படைப்பை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேணாமா? இவனுக்கு பெரிய அளவில பேரெடுக்கணும், எல்லாரும் தன்னை புகழனும்னு ஆசை. அதற்காக என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தான். அவனுக்கு எட்டிய அளவிற்கு அறிவிற்கு முயற்சிகளும் தொடர்ந்தான்.
யாரோ ஒருத்தர் நிறைய படிச்சா புதுப்புது விடயங்கள் கிடைக்கும். அதிலிருந்து புதுசா ஏதாவது திட்டங்களை செய்றபடுத்தலாம்னு சொன்னார். அதிலிருந்து வடை மடிச்சுவர பேப்பரகூட விடுறதில்லை.
அப்படித்தான் ஒருமுறை வடை சாப்பிடும்போது வந்த பேப்பரில ஒரு புத்தகத்தோட பொருளடக்கம் பக்கம் மட்டும் இருந்தது. அதில பல தலைப்புகள் இருந்தது. அதையும் படிச்சான். 'அட்ரா சக்கை'னு வாய்விட்டு கத்தினான். கடைக்காரர்கள் எல்லாரும் பார்க்க, பேப்பரை மடிச்சு வச்சிகிட்டு வீட்டைப்பார்க ஓடினான்.

அந்தப் புத்தகத்தில அப்படி என்னதான் எழுதியிரந்துச்சி்ன்னு கேட்கிறீங்களா?
வீணாகும் பொருட்களிலிருந்தும் பயனுள்ள பொருட்கள் கிடைக்கும்! என்பதுதான், அந்த புத்தக பக்கத்தில் இருந்த விடயம்.

அதில நம்ம சுப்பனுக்கு பிடித்த விடயம், அரிசி (உமி) தவிட்டில் முயற்சி செய்தால் நெய் கிடைக்கும்! என்ற தலைப்பு இருந்ததுதான்.

இதுவரை யாரும் அப்படி முயற்சி செய்தது மாதிரி தெரியவில்லையே! இதை நாம் முயற்சி செய்தால் பெரும் பணமும், புகழும் கிடைக்கும் என்று எண்ணியபோதே, அவன் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.
தலைப்பை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? இந்தப் பக்கத்தை கொண்ட முழுப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் நல்லது. அப்போதுதானே நமமு முயற்சியை தொடரமுடியும் என்று யோசித்தான்.
ழைய புத்தகங்கள் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கிடைக்கும் என்று அவனது புலனாய்வில் கண்டுபிடித்தான்.
உடனே அங்கு பயணமானான். அங்கிருந்த புத்தக கடைகளை முழுவதுமாக அலசி ஆராய்ந்தான். கடைசியாக புத்தகத்தை கண்டுபிடித்தான்.
புத்தகத்தை வாங்கிக் கொண்டு வீடு நோக்கி பறந்தான். உலகமே அவன் கையில் சிக்கி விட்டதாக கற்பனையில் மிதந்தான். வீட்டிற்குள் சென்று தன் அறைக்கதவை சாத்திக் கொண்டு புத்தகத்தை முழுவதும் படித்தான். படித்ததும் குழம்பிப் போனான். அரிசி தவிட்டை முறத்தால் புடைத்தால் நெய் கிடைக்கும் என்றிருந்தது. வெறுமனே புடைத்தால் போதுமா? அப்படி புடைத்தால் எப்படி நெய் கிடைக்கும்? இதைப் பற்றி யாரிடம் கேட்பது? யாரிடம் கேட்கவும் பயந்தான். இதை அவர்கள் செய்ய ஆரம்பித்துவிட்டால்...ம்! நாமே யோசனை செய்வோம் என்று தீவிரமாக முயற்சி செய்தும் பிடிபடவில்லை.
களைப்பு மிகுதியால் புத்தகத்தை வீசி எறிந்தான். புத்தகம் புரண்டு விழுந்ததில் பக்கங்கள் மாறிப்போனது. யதோச்சையாக அப்புத்தகத்தை பார்வையிட்டவன் 'திருத்தப் பக்கங்கள்' என்ற பகுதியை இருந்தது. உடனே ஆர்வமாக எடுத்துப் பார்த்தான். அதில் அரிசி தவி்ட்டிலிருந்து நெய் கிடைக்கும் என்பதை நொய் கிடைக்கும் என்று மாற்றி வாசிக்கவும். பிழைக்கு வருந்துகிறோம் என்றிருந்தது. சுப்பன் புத்தகத்தை சுக்கு சுக்காக கிழித்தெறிந்தான்.

பி.கு. இந்தக் கதை சத்தியமாக எனது சொந்த படைப்பு இல்லை. நான் சிறுவயதில் கேட்டது (அ) படித்தது. ஞாபகத்தில் இருந்த அந்தக் 'கரு'வை தற்போது எனது சொந்த நடையில் எழுதியிருக்கிறேன், அவ்வளவுதான்
!

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...