Monday, 28 March 2011

ஓ போடுவதில் சிக்கல்




வ்வொரு தேர்தலின்போதும் அரசியல்கட்சிகளின் மேல் இருக்கும் எதிர்ப்பை, நம்பிக்கையின்மையை, ஊழல்வாதிகளைக் கண்டு அவர்களுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய 49ஓ-படிவத்தை பயன்படுத்தி வந்தனர். அந்த படிவத்தை பயன்படுத்த வாக்காளர்கள் கையெழுத்து போட்டு வாங்கி பயன்படுத்தலாம் என்பது பழைய விதிமுறை.

ஆனால் தற்போது தேர்தல் விதிமுறைகளை மிகவும் கறாராக செயல்படுத்தி வரும் தேர்தல் கமிஷன் இதிலும் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. 49ஓ படிவத்தை பெறுபவர்கள் தங்களின் முழு முகவரி, அவர் சார்ந்த பகுதியின் பாகம் எண் மற்றும் முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டுமாம். இப்படிவத்தின் கவரை தேர்தல் கமிஷனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேர்தல் முடிவிற்குப் பின் இந்தக் கவர்கள் பிரிக்கப்பட்டு, அதில் அந்த நபர் குறிப்பிட்டிருக்கும் காரணங்களை சரிபார்ப்பார்களாம். அரசியல் காரணங்கள் தவிர வேறு காரணங்கள் இருப்பின் அந்த நபரை நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு பதிவு செய்வார்களாம். அந்த பதிவுகள் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்படுமாம்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு நீங்கள் தயார் என்றால் ஓ போடலாம்!

Tuesday, 28 September 2010

மேல் மருவத்தூர் மகிமை

என் மனைவிக்கு சமீப காலமாக அடிக்கடி கை, கால்களில் வலி ஏற்பட்டு வருகிறது. இதற்காக நரம்பியல் நிபுணர்கள், சித்த மருத்துவர்கள், யுனானி மருத்துவர்கள் என சிகிச்சை மேற்கொண்டும் அவ்வளவாக பலனில்லை. (தற்போது ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறோம்.)

இதற்கிடையில் பலரும் மேல்மருவத்தூர் சென்று வாருங்கள். அங்கு சென்று வந்தால் குறைகள் தீரும் என்றனர். மருவத்தூர் செய்திகள் என்று தொலைக்காட்சியில் வருவ்தையும் பாருங்கள் அப்போது உங்களுக்கே புரியும் என்று சொல்ல, அதன்படியே பார்த்த என் மனைவியும் மேல்மருவத்தூர் செல்ல அதிக ஆர்வம் கொண்டாள். என்மீது அக்கறை இருந்தாள் என்னை அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தாள். சரி என்று நானும் என் மனைவி மற்றும் சகோதரியும், சகோதரியின் மகனும் மேல்மருவத்தூர் சென்றோம். அர்ச்சனைக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். நாங்கள் சென்ற நேரத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இருந்தாலும், கம்பித் தடுப்புகளை போட்டு சுற்றிக் கொண்டே வர வைத்தார்கள். (அந்தக் கோயிலுக்கு செல்வது இதுவே முதல் முறை) சுற்றிவந்து மேல்மருவத்தூர் அம்மனை தரிசிக்க கூடிய நேரத்தில் அம்மா வருகிறார் அம்மா வருகிறார் என்று ஒரே பரபரப்புடன் அங்கிருந்தவர்கள் எங்களை நிற்க வைத்துவிட்டார்கள். பங்காரு அடிகளார் வந்து சென்றதும் எங்களை நல்ல தரிசனம்கூட செய்யவிடாமல் விரட்டாத குறையாக அனுப்பிவைத்தார்கள். அழைத்து வந்த எனக்கு மட்டுமல்ல மனக்குறைகளை போக்கும் ஆர்வத்துடன் வந்த என் மனைவியும், சகோதரியும், சகோதரியின் மகனும் இந்தச் செயலால் மிகவும் வேதனையுற்றோம். கோயிலுக்கு வெளியே வந்து அங்கிருந்தே தெரிந்த மேல்மருவத்தூர் அம்மனை வணங்கிவிட்டு வந்தோம். ம்...

Wednesday, 28 July 2010

பின்னூட்ட சூறாவளியுடன் ஒரு சந்திப்பு!


அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது கைபேசி அலைத்தது. யாரென்று பார்த்தால் பின்னூட்ட சூறாவளி ராகவன் அண்ணன். திடீரென்று அவரிடமிருந்து அழைப்பு வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வணக்கம்
என்றேன், சந்தேகத்துடன். மறுமுனையில் நான் நைஜீரியா ராகவன் பேசுறேன் என்றார். எங்கிருந்துண்ணே என்றேன். சென்னையிலிருந்தான் என்றார்.நலவிசாரிப்புகளுக்குப் பிறகு இன்னைக்கு கொஞ்சம் வேலையிருக்கு. நாளைக்கு சாயங்காலம் வர்றேன் என்றேன். சரி என்றார்.

ஆனால் திட்டமிட்டபடி மறுநாள் (அன்று அவர்களின் உறவினர்கள் வந்துவிட்டதால்) சந்திக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு மறுநாள் அலுவலகம் முடிந்த பிறகு மாலை அண்ணனுக்கு போன் செய்தேன். இதோ இன்னும் ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருப்பேன் என்றார்.

ஏழேகாலுக்கு உங்கள் வீட்டிற்கு வருகிறேன். என்றேன். அவரும் சரியென்றார். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன் என்று போன் செய்ததால் சற்று தாமதமாக போகலாம் என்பதற்காகவே அப்படி சொன்னேன்.

அண்ணனின் வீட்டிற்கும் எனது அலுவலகத்திற்கும் நடை தூரம் (என்கிட்ட வண்டி இல்லே. அதனாலே நடைதூரத்தைத்தானே சொல்லமுடியும்) அவ்வளவுதான்.

வீட்டிற்கு சென்றதும் அன்புடன் வரவேற்றார். வீட்டின் கூடத்தில் அரவிந்த் அவரின் மாமாவுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அரவிந்திடம் இவரைத் தெரிகிறதா என்று கேட்க, சென்றமுறை சந்தித்ததை சரியாக அடையாளம் கண்டுகொண்டார். அண்ணியாரும்தான். நல விசாரிப்புகளுக்கு பிறகு அவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.

பதிவுலகம் பற்றி பேச்சு வந்தது. முன்புபோல் இடுகையிட முடியவில்லை (முன்பு மட்டும் அதிகமா இடுகையிட்டமாக்கும் என்று) கூறினார். அதோடு பதிவுலக சண்டை சச்சரவினால் மிகவும் வருத்தமாகவே பேசினார். கூகுள் இலவசமாக தரும் வரையில் இவ்வளவு நபர்கள் எழுதிவருவார்கள். ஒருவேளை கட்டணம் என்றால் எத்தனைபேர் தொடர்ந்து எழுதுவார்கள் என்பதே நிச்சயமில்லாத நிலையில் இப்படி சண்டை போட்டுக்கொண்டு இருப்பது பற்றி வருத்தமுடன் போசினார். பதிவர் சந்திப்பு வைப்போமா என்றதற்கு,இந்தப்பிரச்சினையால் யாரையும் சந்திக்கக்கூடிய மனநிலையில் அவர் இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது. சென்னையில் குறிப்பிட்ட சிலரை மட்டும் சந்தித்ததாகக் கூறினார். அவர்களில் நானும் ஒருவன் என்றபோது மிகவும் மகிழ்வுற்றேன்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...