
கட்டுமானத்தொழில் செய்துவரும் எனது மற்றொரு நண்பர் ஆர்.எஸ்.நாதன், இங்கே அவரின் கவிதையை க(கா)ட்டியிருக்கிறார். உங்கள் கருத்தை கொட்டுங்கள்!
நிறைய நிறைய அர்த்தங்கள்
நீசொன்தென்ன?
சைகையில் சொன்ன செய்தி
*************
தொடாமலே பேசிக்கொண்டிருக்கையில்
அவள் கண்ணில் விழுந்த தூசி
காற்றுக்கு நன்றி!
*************
வேறுபெயரில் வாழ்த்து
தெரியாமலா போகும்
உன் கையெழுத்து..
**************
உனக்கான காத்திருப்பு
இலையைகிள்ளும் வேளையில்
யார் யாரோ உன் சாயலில்.
- ஆர்.எஸ்.நாதன்,கும்பகோணம்.
