அனைத்து உலக மகளிர்க்கும் மகளிர் தின வாழ்த்துகள்! உலக மகளிர் தினத்தை முன்னிட்டு என் நண்பனின் கவிதை. எல்லோரும் தங்களின் மனைவி்யை பற்றி இப்படி யோசித்திருப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான்?!
பால் வண்டிச் சப்தத்தில்
விழித்துக் கொள்கிறது
மனைவியின் காலை.
முற்றத்தில் குவித்த
பாத்திரங்களைக்
துலக்குதல் தொடங்கி...
பள்ளிக்கு செல்லும்
மகனின் கையசைப்பு வரை
தீவிரப்படும்
அவளின் சுழற்சி.
இருப்பதைக்கொண்டு
பகல் உணவுமுடித்தவளை
மலைக்க வைக்கும்
அவிழ்த்தெறிந்த
முந்தைய அழுக்குகள்...
மல்லுக்கு நின்றபின்
மறுபடி செல்வாள்
அடுக்களையுத்தத்திற்கு.
இரவில்
எல்லாம் முடிந்ததென
எடுத்து வைப்பாள்
கொட்டாவி விட்டபடி
காலை முதல்
இரவு வரை-
அடுக்களையில் உழன்றவளை
அணைக்கத் தொடுகையில்
கூசுகிறது மனசு.
- கோ. பாரதிமோகன், கும்பகோணம்.
மேற்கண்ட கவிதை நடுத்தர வர்க்கத்தினரிடையே நடைபெறும்.
மேல்தட்டு மக்களிடையே எப்படி நடைபெறும் என்பது பற்றிய எனது குசும்பு கீழே...
காலையில எந்திரிச்சு,பாத்திரம் விளக்கி, காபி போட்டு, பிள்ளைகளை குளிபாட்டி, சாப்பிட வைச்சு, அவருக்கு டிபன் எடுத்து அனுப்பி, துணிகளை துவைச்சு...ஸ்... டயடா எனக்கா... நெவர்... ஏன்னா, எல்லா வேலையும் சமையற்காரிதானே செய்றா! (இது எப்படி இருக்கு!)
Showing posts with label சிறப்பு கவிதை. Show all posts
Showing posts with label சிறப்பு கவிதை. Show all posts
Thursday, 5 March 2009
Friday, 13 February 2009
காதல் வனத்துக் கற்பகப் பூக்கள்!

காதலர்தினத்தை முன்னிட்டு என் நண்பனின் சிறப்பு கவிதை உங்கள் பார்வைக்கு!
நில்!
யார் உன்னை
அனுமதித்தது
இந்த காதல் வனத்துள்?
காடுகமழச் சிரிக்கும்
நாங்கள்
கற்பகப்பூக்கள்!
முன்பொருநாள்
மோனத்தவமிருந்து
வேண்டிநின்றோம்
எம்
காம்பினைக்கொய்ய
காதலர்க்கரம்
வேண்டுமென்று.
சீழ்நாறும்
உன்
ரோகவிரல்களால்
தீண்டாதே.
காதலின் ஸ்பரிசமே
எங்கள்ஆடை
உன்
மேனியில் கனப்பதோ
பொருளாதாரப்போர்வை.
நறுமணமே
எங்கள் பாடல்.
உனக்கோ
பேயுதட்டு பாசை.
எங்கள் இதழ்களின்
மினுமினுப்பில்
தேவமகரந்தம்
உன்
அங்கம் முழுக்க
சாதியச்சகதி.
புனிதத்தின் கருப்பையில்
பூத்தவர்கள் நாங்கள்!
நீயோ
மதங்களின் காலடியில்
மண்டியிடுகிறாய்.
எம்
நிழல் தீண்டும் தகுதியும்
உனக்கில்லை
போய்விடு!
பூமிக்கு வெளியே
காத்திருக்கிறது
உனக்ககான கல்லறை.
- கோ.பாரதிமோகன்.
நில்!
யார் உன்னை
அனுமதித்தது
இந்த காதல் வனத்துள்?
காடுகமழச் சிரிக்கும்
நாங்கள்
கற்பகப்பூக்கள்!
முன்பொருநாள்
மோனத்தவமிருந்து
வேண்டிநின்றோம்
எம்
காம்பினைக்கொய்ய
காதலர்க்கரம்
வேண்டுமென்று.
சீழ்நாறும்
உன்
ரோகவிரல்களால்
தீண்டாதே.
காதலின் ஸ்பரிசமே
எங்கள்ஆடை
உன்
மேனியில் கனப்பதோ
பொருளாதாரப்போர்வை.
நறுமணமே
எங்கள் பாடல்.
உனக்கோ
பேயுதட்டு பாசை.
எங்கள் இதழ்களின்
மினுமினுப்பில்
தேவமகரந்தம்
உன்
அங்கம் முழுக்க
சாதியச்சகதி.
புனிதத்தின் கருப்பையில்
பூத்தவர்கள் நாங்கள்!
நீயோ
மதங்களின் காலடியில்
மண்டியிடுகிறாய்.
எம்
நிழல் தீண்டும் தகுதியும்
உனக்கில்லை
போய்விடு!
பூமிக்கு வெளியே
காத்திருக்கிறது
உனக்ககான கல்லறை.
- கோ.பாரதிமோகன்.
லேபிள்கள்:
காதலர்தினம்,
சிறப்பு கவிதை
Subscribe to:
Posts (Atom)
