Tuesday 25 August, 2009

"And Now....."

பள்ளிப் பருவத்தில்
எதிர்காலம் பற்றிய
சில கனவுகளை
சேமித்து வைத்திருந்தேன்.

கால மாற்றங்களில்
காணாமல் போனது
என் கையிருப்புகள்...

ஆச்சியின் "And Now....."
ஆயில்யனின் "And Now....."
நிஜம்ஸின் "And, Now..."
தமிழ் பிரியன் “And, Now..."
அதிரை ஜமாலின் “And Now..."
ஹரிணி அம்மாவின் "And Now....."

Monday 24 August, 2009

காது கொடுத்துக் கேட்டேன்...



தினசரி பணிக்கு ரயிலில் பயணம் செய்வது என் வாழ்வில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்படிச் செல்லும்போது புத்தகங்கள் படிப்பது வழக்கம். கூட்டம் அதிகமாக இருக்கும்போது புத்தகம் படிப்பது இயலாமல் போய்விடும். அப்போது வேடிக்கை பார்த்தவாறு வருவேன். சில சமயம் மற்றவர்களின் செயல்களை, உரையாடல்களை காதில் வாங்குவதும் உண்டு. அப்படி காதுகொடுத்து கேட்டவைதான் இவை...

காட்சி-1


ஒரு இளைஞன் செல்போனில் தன் நண்பனுடன் பேசுபவை...

‘நேத்து அவளை அழைச்சிக்கிட்டு பரங்கிமலை ரயில்வே ஸ்டேசன்ல உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தேன் மச்சி. அப்ப பார்த்து ஒரு போலீஸ்காரன் வந்து எங்களை எழுப்பி விசாரிச்சான்.’

‘............’

‘நாங்க ரயில்வே பிளாட்பாரத்திலதான் உட்கார்ந்திருந்தோம்.’

‘.............’

‘இல்லடா... எக்ஸ்பிரஸ் ரயில் போகும்ல அந்தப் பிளாட்பாரத்தில...’

‘.....’

‘அங்கதான் யாரும் இருக்கமாட்டேங்களேன்னு...’

‘......’

‘அவ மாம்பலத்திலதான் வேலை பார்க்கிறா. நான்தான் பேசிக்கிட்டிருக்கலாம்னு அங்க அழைச்சிட்டு போனேன். ரொம்ப நேரம்கூட இல்லடா. பத்துநிமிசம் பேசிக்கிட்டிருப்போம். வழக்கமா நடக்கிறதுதான். ஆனா நேத்துதான் அப்படி வந்து விசாரிச்சாங்க போலீஸ்.’

‘......’
‘பேசிக்கிட்டிருக்கும் போதே அந்த போலீஸ் அடிச்சிட்டான்டா.’

‘.....’

‘ஏன்சார் அடிக்கிறீங்கன்னு நான் கேட்டேன். அவன் திரும்பவும் அடிக்க வந்தான். நான் கையைப் பிடிச்சிட்டேன். அப்புறம் விசாரிச்சிட்டு விட்டுட்டான். பாவம் அவதான் ரொம்ப பயந்துட்டா.’

‘.....’

‘இனிமே நான் கூப்பிட்டா அவ வருவாளான்னு தெரியலை... சரி நான் அப்புறம் பேசுறேன் மச்சி.’


(பயணம் செய்த அனைவரும் அவனை கவனித்ததால் பேச்சை முடித்துக் கொண்டான் என்று நினைக்கிறேன்.)


காட்சி-2


‘ஹலோ... இன்னைக்கு ராத்திரி சரக்கு அங்கிருந்து மூவ் ஆகிடும். ராத்திரியே இங்க வந்திடும். ஆனா நாம காலையில மாத்திகிடலாம். கோயம்பேடு வெங்காய மண்டிக்கு வந்திடுங்க. காலைல ஆறரை மணிக்கு மாத்திக்கலாம். நிச்சயம் வந்திடும்.எதுக்கும் கன்பர்ம் பண்ணிக்கிட்டு உங்களுக்கு போன் பண்ணிச் சொல்றேன்.


(பேசறதைப் பார்த்தா கள்ளக்கடத்தல் பண்ணுறவங்க மாதிரியே பேசுறாரே... ஒருவேளை அப்படியும் இருக்குமோ...)


காட்சி-3

ஒரு ஜோடியை ரயில்வே போலீஸ்காரர் அழைத்துக் கொண்டு செல்ல, என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஒரு கூட்டம் பின் தொடர்ந்து வந்தது. (நீயும்தானே என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.... இல்லங்க... நான் அந்த போலீஸ்காரர்கள் அறைக்கு வெளியே நின்றுதான் ரயில் ஏறுவது வழக்கம்.)


உள்ளே அழைத்துச் சென்ற போலீஸ்காரர் சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்தார்.

‘என்ன சார்?’ ஒரு ஆர்வம் விரும்பி கேட்டார்.

‘ரொம்ப நேரம் அங்க உட்கார்ந்திக்கிட்டு இருந்தாங்க. என்ன இங்க உட்கார்ந்திருக்கீங்கன்னு கேட்டா ஃப்ரண்ட்ஸாம். அந்தப் பெண் கழுத்தில தாலி கிடக்கிது. வேலைக்கு வந்தா வேலை முடிஞ்சதும் வீட்டுக்குப் போகாம இங்க என்ன பேச்சு வேண்டிக்கிடக்குது. இது என்ன பார்க்கா? வந்து கூத்தடிக்கிறதுக்கு’ என்றார் சிரித்துக் கொண்டே.

(ஒருவேளை அன்னைக்குத்தான் அந்த போலீஸ்காரர் நிம்மதியா தூங்கியிருப்பாரோ... எனக்கு விதி படம் ஞாபகத்துக்கு வந்தது... வேறொண்ணும் இல்லீங்க.)

அப்புறம்..படிச்சிட்டு கருத்துக்களை தெரிவியுங்கள். எனது மற்றொரு வலைத்தளமான தகவர்மலர் பார்த்தீங்களா?

Thursday 20 August, 2009

புதுசோ புதுசு!

வலையுலக தோழர்களுக்கு வணக்கம்.

இதுவரை ‘இலக்கியா’, ‘கவிதைகுரல்’ மூலம் உங்களை சந்தித்து வந்த இந்த குடந்தை அன்புமணி இப்போது ‘தகவல்மலர்’ என்ற புதிய வலைப்பக்கம் மூலமும் சந்திக்கவிருக்கிறேன். இந்த வலைப்பக்கத்திற்கான அவசியம் என்ன? அங்கு வாருங்கள். தெரிந்து கொள்ளுங்கள்.

Tuesday 18 August, 2009

இது பைத்தியக்காரனின் பதிவுக்கு எதிர்பதிவு அல்ல...

முன் குறிப்பு- இந்த இடுகை யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.
பல பிளாக்கர்கள் ஒன்றுகூடி கடந்த 2007-ஆம் ஆண்டு ‘வலைப்பதிவர் பட்டறை’ நடத்தினார்கள். அந்த வலைப்பதிவு பட்டறை மூலம்தான் நான் வலையுலகிற்கு அறிமுகமானேன். பல பதிவர்கள் இணைந்து நடத்திய அந்த பட்டறைக்கு யாரிடமும் பணம் கேட்கவில்லை. அவர்களே ஆர்வமாக நடத்தினார்கள். அதோடு குறிப்பு புத்தகம், எழுதுபொருள், பிளாக் தொடங்குவது, பதிவிடுவது, எழுத்துருக்களை பயன்படுத்துவது, தரவிரக்குவது உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய குறுவட்டுடன் (சி.டி) கூடிய கிழக்கு பதிப்பகத்தின் சிறு கையேடும் அடங்கிய பை அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது.அதோடு காலை, மாலை தேநீர் மற்றும் மதிய சைவ சாப்பாடும் வழங்கப்பட்டது.

அதேபோல் தங்களையும் செய்யச் சொல்லவில்லை. ஆனால் சிறுகதைப் பட்டறைக்கு தாங்கள் நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ 400 என்பது அதிகமாகவே படுகிறது.
சிறுகதைப் பயிற்சி பட்டறைப் பற்றிய பதிவுக்கு இங்கு க்ளிக்கவும்.

எம்.எம்.அப்துல்லா said...
//ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ. 400 //

is it enough anna?? என்ற கேள்விக்கு

யுவகிருஷ்ணா said...
//is it enough anna??//

ஹலோ! துவரம்பருப்பு கிலோ நூறு ரூபாய்க்கு விற்குது :-( - என்று பதிலளித்துள்ளார்.

முரளிகண்ணன் said...
சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

400 போதுமா என சந்தேகமாகவே இருக்கிறதண்ணா. என்கிறார்

புருனோ Bruno said...
////ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ. 400 //

is it enough anna??//

கண்டிப்பாக போதாது ..... அரங்க வாடகை + உணவு ஒரு நபருக்கு அதற்கு மேல் வரும் என்று நினைக்கிறேன். இது தவிர கோப்பு, தாள்கள் போன்ற செலவுகள் இருக்கின்றன

சிவராமன் சார்

இதில் சமரசம் செய்து கொள்ள அவசியம் இல்லை

உங்கள் கைக்காசை போட்டு நீங்கள் நடுத்த வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்

குறைந்த பட்சம் 600 ரூபாயாவது வைத்துக்கொள்ளுங்கள்

என் கருத்தை மற்றவர்களும் வழிமொழிவார்கள் என்றே நினைக்கிறேன்.

பிளாக் நடத்துவது இலவசம் என்பதால்தான் இன்று இத்தனை பேர் பிளாக் நடத்துகிறார்கள். இதுவே நாளை கட்டணம் என்றால் முக்கால்வாசி பேர் காணாமல் போய்விடுவார்கள். பிளாக் நடத்துபவர்கள் அனைவரும் பெரிய வேலைவாய்ப்பில் உள்ளவர்கள், பெரிய சம்பளம் பெறுபவர்கள் இல்லையென்பது மறுக்கமுடியாத உண்மை. இதே கருத்தைத்தான் நண்பர் பாலபாரதியும் கூறியிருக்கிறார்.


♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
என்னால் ஆன முயற்சிகளை..செய்கிறேன். எப்படியும் கலந்துகொள்ளவேண்டும் என்பதே ஆசை!

பணவிசயத்தைப் பொருத்தமட்டில் மற்றவர்கள் சொல்லுவது போல.. நான் சொல்ல மாட்டேன். அகநாழிகை ஆலோசனையின் படி ஏதாவது பள்ளிகளில் இடம் பிடித்திருந்தால்.. இதைவிட குறைவான செலவுகளியேலே பட்டறையை நிச்சயம் நடத்தலாம்.

உங்களுக்கும் பளு குறையும்.

400 ரூபாய் எனக்கு பொருட்டு அல்ல. அது கூட செலுத்தமுடியாதவர்கள் இங்கு உண்டு!( மூன்று வருடங்களுக்கு முன் நான் வலை உலகிற்குள் வந்தபோது என் மாத சம்பளமே ஐந்தாயிரம் தான்) அவர்களின் நிலை!


ஆண்மை குறையேல்.... said...
நுழைவுக் க‌ட்ட‌ண‌ம் குறைத்தால் ப‌ர‌வாயில்லை..400/‍ அதிக‌ம்...ஏசி ஹால் தேவையா? யோசிக்க‌வும்.

karpaka said...
//இந்த ரிஸார்ட்டிலுள்ள செண்ட்ரலைஸ்டு ஏஸி பொருத்தப்பட்ட கான்ஃப்ரன்ஸ் ஹாலை புக் செய்திருக்கிறோம்.//

ஏ.சி. ஹால்... இந்த மழை நேரத்தில்... தேவையா... ஒரு பள்ளிக்கூடத்தில் ஏற்பாடு செய்திருக்கலாம். செலவு குறையும்.

//காலை தேனீர் அல்லது காபி, மதியம் சைவ - அசைவ உணவுகள் (பப்பே சிஸ்டம்), மாலை தேனீர் அல்லது காபி ஆகியவற்றுக்காக கலந்து கொள்ளும் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா ரூ. 400 வசூலிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. //

அசைவ உணவுகள் தேவையில்லை. மற்றவை ஓ.கே. முடிந்தவரை தொகையினை குறைத்தால் நிறைய பேர் கலந்து கொள்ள முடியும். கூட்டத்தை குறைப்பதற்கான முயற்சியாக இந்தக் கட்டணத்தை எண்ணுகிறேன். என் எண்ணம் சரிதான் என்றால்... இந்த பட்டறை நிகழ்ச்சி பற்றிய பதிவுகளைத்தான் (என்னைப் போன்ற சம்பளம் குறைவாக பெறுவோர்கள்) படித்து தெரிந்து கொள்ள முடியும்.

தங்களின் முயற்சியை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் மேலே உள்ள கருத்துக்களையெல்லாம் யோசித்துப் பாருங்கள். இல்லாவிடில் நிகழ்ச்சிகளின் தொகுப்பை குறுவட்டாக குறைந்த செலவில் வெளியிட முடியுமா என்றாவது பாருங்கள். எங்களைப் போன்றவர்களுக்கு அவ்வசதியையாவது செய்து கொடுங்கள். நன்றிக்குரியவர்களாக இருப்போம்.

Friday 14 August, 2009

உயிர்காப்போம் தோழர்களே...



சக பதிவர் நையாண்டி நைனா அவர்களின் பதிவை இன்று காலையில் படிக்க நேர்ந்தது. அதில் உயிருக்கு போராடும் நம் பதிவுலகைச் சேர்ந்த செந்தில்நாதன் பற்றி எழுதியதைப் படித்ததும் மனம் கலங்கிப் போனேன். அவருக்கு நம்மால் ஆனதை அது சிறு தொகையாக இருந்தாலும் செலுத்தி அவர் உயிரை காப்பாற்ற உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சிறுதுளி பெருவெள்ளம். தங்களால் முடிந்ததை அது நூறு ரூபாயானாலும் சரி, அதை உடனே செய்யுங்க்ள் தோழர்களே...

நையாண்டி நைனா அவர்களின் பதிவில் இருந்ததை அப்படியே கீழே உங்கள் பார்வைக்காக கொடுத்திருக்கிறேன்...

சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் எனது கல்லூரி நண்பருமான திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.

ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலதிக விபரம் வேண்டுபவர்கள் என்னையோ அல்லது எனது நண்பர் கருணாநிதியையோ தொடர்புகொள்ளலாம்

எனது செல்பேசி எண்: +966 508296293
கருணாநிதி செல்பேசி எண்: +65 93856261


சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன்.

Hi Friends,
This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment.

Thanks


Regards,
Santhi Senthil Nathan.

Sunday 9 August, 2009

இயக்குனர் பாலுமகேந்திராவுடன் கிணற்றடியில் நிகழ்ந்த சந்திப்பு.

மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு ‘ஓ பக்கங்கள்’ ஞானி அவர்களின் வீட்டுக் கிணற்றடியில் எழுத்தாளர்களை வரவழைத்து அவர்களின் எழுத்து அனுபவத்தை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த மாத நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தவர் ‘கேமராக் கவிஞர்’ என்று போற்றப்படும் இயக்குனர் பாலுமகேந்திரா.


படைப்புகள் என்பது எப்படி இருக்க வேண்டும் என்று பார்வையாளர்களை பார்த்து கேட்டார். பலரும் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக, காலத்தை பதிவு செய்வதாக, உருவமும் உள்ளடக்கமும் கொண்டதாக, செய்தியை (மெஸேஜ்) கொண்டிருப்பதாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். வரவேற்ற பாலுமகேந்திரா அவர்கள் உருவமும் உள்ளடக்கமும் முக்கியம் என்றார். அது பற்றி விளக்கவும் செய்தார்.


பாட்டி வடை சுட்ட கதையை ஒராயிரம் வருடங்களாக சொல்லி வருகிறோம். இன்னும் ஒரு கோடி ஆண்டுகளாயினும் சொல்லுவோம். ஆனால் அதை எப்படி சொல்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்றார்.


எல்லாச் சிறுகதைகளுக்கும் முடிவுகளை நாமே சொல்லிவிட முடியாது. சில கதைகளின் முடிவுகளை வாசகனின் பார்வைக்கே விட்டுவிட வேண்டியதிருக்கும் என்றார். நெருங்கிய நண்பனின் தாய் இறந்துவிடுகிறாள். அந்த நண்பனின் தாயின் கையால் இவனும் பலமுறை சாப்பிட்டிருக்கிறான். அந்த நண்பனுக்கு ஆறுதல் சொல்ல அவன் வீட்டிற்கு செல்கிறான். அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய் அமர்ந்திருக்கும் அவனின் கையைப் பற்றி தடவிக் கொடுப்பதில் ஆயிரம் ஆறுதல் வார்த்தைகள் அடங்கியிருக்கிறது. இதை வார்த்தைகளால் நிரப்ப முடியாது என்றார்.


ஒரு சிறுகதையை குறும்படமாக எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் பற்றி கூறினார். உதாரணத்திற்கு பாட்டி வடை சுட்ட கதை எடுத்துக் கொண்டு விளக்கினார். ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தார். இதில் ஒரு ஊர் அடங்கியிருக்கிறது. அந்த ஊர் எப்படிப்பட்டது. கிராமமா, நகரமா, மலைப்பிரதேசமா என்பது போன்றவை கவனிக்க வேண்டும். பாட்டி- பாட்டி என்றால் எந்த மாதிரி பாட்டி? சுமங்கலியான பாட்டியா? விதவைப் பாட்டியா? காதில் பாம்படம் மாட்டியிருக்கும் பாட்டியா? போன்றவை இதுபோல் கவனிக்க வேண்டும் என்றார்.இந்த மூன்று வார்த்தைகளிலேயே இவ்வளவு கவனிக்க வேண்டியிருப்பதென்றால் முழுக்கதைக்கும் எவ்வளவு மெனக்ககெட வேண்டியிருக்கும் என்பதை விளக்கினார்.


தன்னிடம் வாய்ப்பு கேட்டு வரும் இளைஞர்களிடம் கடைசியாக படித்த நாவல் என்ன? சிறுகதை என்ன? என்று கேள்வி கேட்பதாகவும், அவர்கள் படிக்கவில்லையென்றால் படிக்க சொல்வதாகவும் அதன்பிறகே அவர்களுக்கு திறமை இருந்தால் சேர்த்துக் கொள்வதாகவும் கூறினார். தனது உதவி இயக்குனர்களிடமும் தினசரி ஒரு கதையை படித்து அதை அவர்கள் எப்படி சீன் பிரிக்கிறார்கள், குறிப்பு எடுக்கிறார்கள் என்பதை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


பதேர் பாஞ்சாலி நாவலைப் படித்த பிறகே அதை படமாக பார்த்ததாகவும், நாவலைவிட சத்யஜித்ரே படமாக்கியிருந்த விதம் அருமையாக இருந்ததாகவும் தெரிவித்தார். பிரபல தொலைக்காட்சி அவரிடம் 52 வாரங்களுக்கு தொடர் எடுத்து தரும்படி கூறியபோது தான் படித்து மகிழ்ந்த சிறுகதைகளை தொடராக எடுத்ததாக தெரிவித்தார். அப்படி எடுக்கப்பட்ட எழுத்தாளர் ‘மாலன்’ அவர்களின் சிறுகதையை (ஞானி அருமையாக வாசித்தார்.) வாசிக்கச் செய்து, அந்த சிறுகதையை தான் படமாக மாற்றிய போது தான் செய்த மாற்றங்களை கண்டுணர செய்தார். (நிகழ்ச்சி முடிவில் அந்தப் படம் திரையிடப்பட்டது.)


எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்களின் ‘பிரசாதம்’ கதையை படமாக மாற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டதாக பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலாக கூறினார். யுவசந்திர சேகரன், மாலன் கதைகளை படிக்க தான் பரிந்துரைப்பதாக ஒரு கேள்விக்கு தெரிவித்தார். இதனால் ஜெயகாந்தன் போன்ற படைப்பாளிகளை தான் மதிக்கவில்லை என்று பொருளல்ல என்றும் கூறினார்.


மூன்றாம்பிறை படம் பார்த்த பலர் இப்படி படம் எடுப்பது சுலபம். கமர்ஷியலாக உங்களால் படம் எடுத்து வெற்றிபெற முடியுமா என்று (நீங்கள்) கேட்டதற்காகவே அந்தப் படத்தின் பெயரையும்) ‘நீங்கள் கேட்டைவை’ என்று வைத்ததாகவும் சொல்லி கலகலப்பூட்டினார்.


இந்நிகழ்வில் நமது பதிவர்கள் லக்கிலுக், பைத்தியக்காரன், அக்னி, அதிஷா,ஆ.முத்துராமலிங்கமும், பொன்.வாசுதேவன், முத்துவேல் ஆகியோரும் வந்திருந்தனர்.


பின்பு முத்துராமலிங்கம் சொன்னார்- தமயந்தி மற்றும் உமாஷக்தி அவர்களும் வந்திருந்ததாக...

இந்த இடுகையில் இன்னும் சில விடயங்கள் விடுபட்டிருக்கலாம். வந்திருந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.அல்லது இடுகைகளாகவும் போடலாம்.

Friday 7 August, 2009

சொல்லத்தான் நினைக்கிறேன்...



* செல்போன் என்பது தொலை தொடர்பு சாதனம் என்பது போய் தொல்லை தரும் சாதனமாக மாற்றிவிட்டார்கள். முதலில் பேசுவதற்காக மட்டுமே பயன்பட்டு வந்ததை பாடல் கேட்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் இப்போது வீடியோ வரை வந்தாகிவிட்டது. இனிமேல் திரைப்படங்கள்கூட தனியார் தொலைபேசி நிறுவனங்கள் இந்த எண்ணை அழுத்தினால் இந்த திரைப்படங்கள் கிடைக்கும் என்ற காலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை போலும்.

தாம்பரம் சானடோரியத்தில் ஏறி பூங்கா நிறுத்தம் வரை பயணம் தினசரி ரயில் பயணத்தை மேற்கொள்பவன் நான். இதற்குள் ஏகப்பட்ட நிறுத்தங்கள் இருக்கின்றன. ஒரு சிலர் காதில் (ஹியர் போன்) மாட்டிக் கொண்டு பாடல் கேட்கிறார்கள். ஆனால் பலர் சத்தமாக பாடலை வைத்துக் கொண்டு அடுத்தவர்களுக்கு தொல்லை தருகிறோமே என்ற எண்ணமே இல்லாமல் இருக்கிறார்கள். ஒருவர் நான் ஒரு ராசியில்லாத ராஜா என்று பாடல் போட அடுத்தவர் டாடி மம்மி வீட்டில் இல்லை என்ற பாடலை ஒளிபரப்ப... அந்த நிகழ்வை மனதிற்குள் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... நீண்ட பயணத்தின்போதுதான் பெரும்பாலும் எனக்கு கவிதைகள் பிறக்கும். அதற்கு இந்த ரயில் பயணம் பெரும் வசதியாக இருந்தது. ஆனால் இப்போது... இதை அவர்களிடம் சொல்லத்தான் நினைக்கிறேன்...


பிரபல பாடகர் யேசுதாஸ் அவர்கள் பற்றி ‘சங்கீத சாகரம் யேசுதாஸ்’ என்ற தலைப்பில் மணிமேகலை பிரசுரத்தார் நூல் வெளியீட்டு விழா நாரதகான சபாவில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அவ்விழாவில் யேசுதாஸ் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக நடிகர்- இயக்குனர் பார்த்திபன், நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார்கள். (இது நடந்தது 1993 அல்லது 94 என்று நினைக்கிறேன்.) நானும் நண்பர்களும் கலந்து கொண்டோம்.

விழா ஆரம்பித்து சிறிது நேரத்தில் நடிகை கஸ்தூரி வந்தார். மேடையில் அமர்ந்தவர் பார்வையாயளர்களை நோக்கி பார்த்தார். அப்போது எங்கள் பக்கம் பார்வையை ஓட்டியவர் புன்னகைத்தார். பின்பு கையை ஆட்டி மகிழ்ச்சியை தெரிவித்தார். உடனே என் நண்பர்கள் ‘என்னைப் பார்த்துதான்’ இல்லை என்னைப் பார்த்துதான்’ என்று ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டார்கள். இப்படியே ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டிருந்தோம்.


திடீரென ஒரு பரபரப்பு...
கஸ்தூரி படப்பிடிப்புக்கு செல்ல வேண்டுமென்பதால் கிளம்புவதாக சொல்லி கிளம்பினார். மேடையைவிட்டு இறங்கியவர் நாங்கள் அமர்ந்திருந்த வரிசையை நோக்கி வேகமாக சிரித்துக் கொண்டு வந்தார். வந்தவர் நாங்கள் அமர்ந்திருந்த வரிசைக்கு முன் வரிசையில் இருந்த ஒரு ஜோடியை பார்த்து எப்படியிருக்கீங்க...(அவர்கள்... சென்னை தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் கணவன்- மனைவி ஜோடி) பார்த்து ரொம்ப நாளாச்சு என்றும் இன்னும் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். எங்கள் முகம் போன போக்கை சொல்லத்தான் நினைக்கிறேன்...

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...