Friday 9 July, 2010

பொள்ளாச்சி நசன்

'பொள்ளாச்சி நசன்'. இவரை 1990-லிருந்து- அதாவது நான் 'நந்தவனம்' என்ற பெயரில் சிற்றிதழ் நடத்தி வந்த அத்தருணங்களிலிருந்து தெரியும். நண்பர்கள் மூலம் அவரது அறிமுகம் கிடைத்தது. 'சிற்றிதழ் செய்தி' என்ற இதழை நடத்தி வந்தார். அவருக்கு வரும் சிற்றிதழ்களைப் பற்றி நல்ல அறிமுகத்தோடு நடத்தி வந்தார். அதோடு வரும் சிற்றிதழ்களை எல்லாம் சேமித்து அவணக் காப்பகமாகவும் இன்றளவும் வைத்துள்ளார்.
   தமிழ்மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக தமிழ்ப்பள்ளி ஒன்றையும் நடத்திவருகிறார். காலமாற்றங்களுக்கு கேற்ப தனது பணியை இப்போது இணையத்திலும் (அவரே இணையத்தை வடிவமைத்து) செய்து வருகிறார். அரிதான பல தமிழ் நூல்களை மின்னூலாக்கும் (நாள் ஒரு நூல் என்ற முறையில்) பெரு முயற்சியில் பல புத்தங்கள் வந்துள்ளன. வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் கற்றுக் கொள்ள இசை வடிவிலான முயற்சிகளையும் செய்து வருகிறார். இதனை பதிவிரக்கியும் பயன்படுத்தும் நோக்கில் தந்துள்ளார். இவரைப் பற்றி இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள அவரது நேர்காணல் படிக்க இங்கு http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=4533&Itemid=212 சுட்டவும்.
அவரது தளத்தினைக் கண்டால் இன்னும் அவரது உழைப்பு, முயற்சி எல்லாம் தெரியவரும். அவரது வலைத்தளம் செல்ல http://www.thamizham.net/

2 comments:

பனித்துளி சங்கர் said...

'பொள்ளாச்சி நசன்'இது வரை நான் அறிந்ததில்லை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி .

குடந்தை அன்புமணி said...

தங்கள் வருகைக்கு மின்ன நன்றி நண்பா!

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...