Thursday 16 June, 2011

வலைப்பதிவர் ராஜீவ்காந்தி நலம்பெற பிரார்த்திப்போம்...


எழில்கவி வலைப்பதிவரும், எனது நண்பருமான ராஜீவ்காந்தி அவர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைய நாம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்...

அவர் குணமடைய வேண்டி நண்பர் சூர்யநிலா எழுதிய சிறு கவிதை...

உனது ராகங்கள் எப்போதும்
எங்களுக்கு கேட்டுக்கொண்டிருக்கவேண்டும்
அது செந்தமிழ் ராகமாக
எப்போதும் இசையோடு வேண்டும்
இளகிய இதயமிருப்பவருக்கு
வலி வரத்தான் செய்யும்...
அதையும் வெல்லும் வல்லமை
உனக்குண்டு...
வாழிய நீ பல்லாண்டு...

-கவிஞர் சூர்யநிலா

(ராகா குறுஞ்செய்தி இதழ், செந்தமிழ் இலக்கிய குறுஞ்செய்தி இதழும் நடத்தி வருகிறார்)

4 comments:

கோவி.கண்ணன் said...

விரைவில் நலமடைந்து வீடு திரும்ப நல்வாழ்த்துகள்

குடந்தை அன்புமணி said...

மிக்க நன்றி. அதுவே என் விருப்பமும்...

நிரூபன் said...

சகோதரன் விரைவில் குணம் பெற்று, மீண்டும் பழைய உத்வேகத்துடன் பயணிக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போமாக.

குடந்தை அன்புமணி said...

மிக்க நன்றி நண்பரே... நம் பிரார்த்தனைகள் வீண்போகாது...

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...