Thursday 5 February, 2009

நான் கடவுள் - ஒரு பார்வை.

"நான்' என்ற எண்ணம் கொண்ட மனிதர் வாழ்ந்ததில்லை' என்றொரு பாடல் தமிழில் உள்ளது. கலைஞர்கூட ஒரு சிறு கவிதை எழுதியிருக்கிறார். (மாநகர பேருந்துகளில்கூட பார்த்திப்பீங்களே!) நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. 'நாம்' என்று சொன்னால் உதடுகள்கூட ஒட்டும் என்று.
நான் என்ற சொல் அகங்காரத்தை குறிக்கும். நாம் என்ற சொல்லே ஒற்றுமையை குறிக்கும். நான், நீ என்று விலகி நிற்காமல் நாம் என்றும் ஒற்றுமையாய் இருப்போம்.

அடுத்து...கடவுள்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பெரிய கேள்வி. இருக்கிறார் என்பாரும் இருக்கின்றார். இல்லையென்பாரும் இருக்கின்றார். கல்லை நட்டு வைத்தாலே கையெடுத்து கும்பிட இங்கே ஆட்கள் நிறைய உண்டு. கடவுள் பெயரைச் சொல்- ஏமாற்றுவோரும் உண்டு. அவர் பெயரைச் சொல்- நன்மைகள் செய்வோரும் உண்டு.
நாம்தான் பகுத்தறிந்து செயல்படவேண்டும்.
இன்னும் விரிவா சொல்லனும்னு ஆசை... சரி ரொம்ப மொக்கை போட வேண்டாமேன்னு இத்தோட நிறுத்திக்கிறேன்.

13 comments:

நட்புடன் ஜமால் said...

\\நாம்தான் பகுத்தறிந்து செயல்படவேண்டும்.\\

சரியான வார்த்தை.

பாண்டித்துரை said...

நீங்க கடவுள்

Sivamjothi said...

நட்ட கல்லு பேசுமா? நாதன் உள் இருக்கையில்!!!

குடந்தை அன்புமணி said...

நட்புடன் ஜமால் said...
\\நாம்தான் பகுத்தறிந்து செயல்படவேண்டும்.\\

சரியான வார்த்தை.

நன்றி ஜாமல்!

குடந்தை அன்புமணி said...

//பாண்டித்துரை said...
நீங்க கடவுள்//

இதுதானே வேண்டாங்கிறது... தங்கள் வருகைக்கு நன்றி! கருத்துக்கும் நன்றி!

குடந்தை அன்புமணி said...

//Yaro said...
நட்ட கல்லு பேசுமா? நாதன் உள் இருக்கையில்!!!//

வாங்க நாதா... தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

இராகவன் நைஜிரியா said...

// கடவுள் பெயரைச் சொல்- ஏமாற்றுவோரும் உண்டு. அவர் பெயரைச் சொல்- நன்மைகள் செய்வோரும் உண்டு.
நாம்தான் பகுத்தறிந்து செயல்படவேண்டும். //

சரியா சொன்னீங்க..

நாம் தான் பகுத்தறிந்து செயல்பட வேணும்.

ஏமாறுகிறவன் இருக்கும் வரையில் ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்

நசரேயன் said...

பகுத்தறிவு ஆசான் வாழ்க

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

குடந்தை அன்புமணி said...

வருகை தந்து ஊக்கம் கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி!

தமிழ் அமுதன் said...

நான்-கடவுள் ...ஒருகருத்துரை......

நான்தான் எல்லாம் என்று, கடவுள் சிலையை அருகில் வைத்துக்கொண்டு
நாடகம் போடும் போலி சாமியார்களை நம்புகிறவர்களும் இங்குண்டு!!!!


நீதான் எல்லாம், உனக்குள்ளே எல்லாம் அடங்கி இருக்கிறது என்று அந்த கடவுளே
உயிர்த்தெழுந்து வந்து சொன்னால் கூட, அதை நம்பாதவர்களும் இங்குண்டு!!!!

குடந்தை அன்புமணி said...

வாங்க ஜீவன் சார்! புதிதாக நம்ப பக்கம் வந்திருக்கீங்க. தங்களின் வருகைக்கு முதலில் நன்றி! உங்க கருத்தில உலகமே அடங்கிப் போயிடுச்சு! மிக்க நன்றி!

கார்த்திகைப் பாண்டியன் said...

தலைவரே.. நீங்க இன்னும் படம் பாக்கலன்னு நினைக்குறன்.. உங்கள விட பயங்கரமா பாலா மொக்க போட்டிருக்காரு..

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...