Saturday 13 December, 2008

துரித உணவும் பிரபுதேவாவும்


நடனப்புயல் என்று அழைக்கப்படும் நடிகர் # இயக்குனர் பிரபுதேவாவின் மகன் விஷால் (வயது 13) சமீபத்தில் (4.12.08) புற்று நோயால் பாதிக்கப்பட்டு காலமானார். கடந்த ஓரிரு வருடங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாராம்.


பெற்றோர்களின் எதிர்ப்புக்கிடையில் காதல் திருமணம் செய்துகொண்ட பிரபுதேவாவை மீண்டும் குடும்பத்துடன் இணைத்து வைத்தவன் என்ற வகையில் மூத்தமகன் விஷால் மீது இருவருக்கும் அதீதசெல்லம். புத்திசா-த்தனமும் எல்லாருடனும் அன்புகாட்டுவதென துறுதுறுப்பாக திரிந்த விஷாலுக்கு, பிடித்தது ஃபாஸ்ட் ஃபுட் உணவாம். அந்த உணவே அவனுக்கு எமனாக அமைந்ததுதான் சோகம்!


உணவுகள் மனிதன் உயிர்வாழ உதவுபவை. அவையே உயிர்துறக்க காரணமாகுமா? ஆகும் என்கிறார்களே! சத்தான உணவு வகைகளை மனிதன் உட்கொள்வது போக, இப்போது மக்கள் நாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டார்கள். போட்டி நிறைந்த உலகத்தில் உண்பதற்குகூட நேரமின்றி கிடைத்த உணவுகளை விழுங்கிவைக்கிறோம். அது சத்தானதா, உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. அந்த நேரத்தில் பசி மறக்க வேண்டும், அவ்வளவுதான். அதற்கு மக்கள் ஃபாஸ்ட்புட் மற்றும் “பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை நாடுகின்றனர். அவற்றினால் வரும் தீங்கினை அறியாமல்! ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் துரித உணவு வகைகளால் கேன்சர் வர வாய்ப்பு உள்ளது என்பதால் விஷாலுக்கு தரக்கூடாது என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். சுவைக்காக இவ்வகை துரித உணவுகளில் அஜினமோட்டோ எனும் பொருள் கலக்கப்படுவதே இதற்குக் காரணம். இவை நாளடைவில் உயிரையே குடிக்கக்கூடிய அளவுக்கு கொடுமையானது என்கிறார்கள். (அஜினமோட்டோ பல நாடுகளில் தடை செய்யப் பட்டிருக்கிறதாம்.)


உணவு விஷயத்தில் நீங்க எப்படி? என்ன பண்ணப் போறீங்க?

No comments:

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...