Friday 19 December, 2008

தர்ம சிந்தனை


பொதுமக்களைவிட பிச்சைக்காரர்களிடம் பணப்புழக்கம் அதிகமாகவே இருப்பதாக பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் அமைத்திருப்பார்கள். நீங்களும் அப்படிப் பட்டவர்களை நேரிலும் பார்த்திருக்கலாம். பத்திரிகைகளிலும் அவ்வப்போது சில புள்ளி விவரங்களை வெளியிடுகின்றன. "பாத்திரமறிந்து பிச்சையிடு' என்பது பழமொழி. (இந்த பாத்திரம் என்பது அவர்களின் கதாபாத்திரம் அதாவது கேரக்டர்) ஆனால் இப்போது யாரையும் கணிக்க முடியவில்லை என்பது வேறு விஷயம்.இதையெல்லாம் படிக்கும்போதும், புகைப்பிடிப்பது, மது அருந்துவதுமாக அவர்களைப் பார்க்கும் போதும் இவர்களுக்கு ஏன் பிச்சையிட வேண்டும் என்று எண்ணியிருக்க கூடும். நானும் அவ்வாறுதான் எண்ணிணேன். ஆனால் சமீபத்தில் விவேகானந்தர் கூறியிருந்ததைப் படிக்க நேர்ந்து. அதன்பிறகு என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். அவர் கூறியதாவது...""நீங்கள் கொடுக்கும் ஓரிரு பைசாவை ஒரு பிச்சைக்காரன் எப்படி செலவுடுகிறான் என்பது குறித்து ஏன் மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டும்? எதுவுமே தராமல் அவனைத் திருடனாக்குவதைவிட, வசதியுள்ளவர்கள், தங்களால் முடிந்ததைப் பிச்சையிடுவது நல்லதல்லவா? நீங்கள் தருகிற அற்ப காசைக் கொண்டு அவன் கஞ்சா வாங்கிட செலவிட்டால் அது அவனை மட்டும்தான் பாதிக்கும். ஆனால் அவன் திருடனாகவோ, அதைவிட கேவலமானத் தொழில் செய்பவனாகவோ மாறிவிட்டால் அது சமுதாயத்தையே பாதிக்கும் அல்லவா?'' என்கிறார்.யோசிக்க வேண்டிய விஷயம்தான்!

No comments:

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...