Monday 19 January, 2009

வலைத்தளத்தில் கவிதை எழுத நான் பட்டபாடு...

முதன் முதலில் வலைப்பதிவர் பட்டறையில் கலந்துகொண்டபோதுதான் இப்படி நமக்கே நமக்கென்று ஒரு வலைப்பதிவை தொடங்கலாம், நமது எண்ணங்களை, கருத்துக்களை, படைப்புக்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல, நட்பை வளர்க்க மிகப்பெரிய வாய்ப்புண்டு என்று உணர்ந்தேன். எனக்கென்று ஒரு வலைப்பதிவை உருவாக்கியவுடன் முதல் இடுகை கவிதையாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதன்படி கவிதையை நோட்பேடில் டைப் செய்து காப்பி செய்து எடுத்துக்கொண்டு இணைய மையத்திற்கு சென்றேன். இடுகை இட்டபின் அது கவிதையாக இல்லாமல் பாரா கிராபாகவே எடுத்துக்கொண்டது. சரி என்று தேவைப்படும் இடத்தில் கர்சரை வைத்து என்டர் தட்டினேன். ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையே இடைவெளி அதிகமாகி கவிதை வெளியிடும் என் ஆசையை தடுத்தது. நானும் பலமுறை முயற்சி செய்தேன். முடியவில்லை. வலைத்தளத்திற்கு புதியவன் என்பதால் தெரிந்தவர்கள் அதிகமில்லை. எனக்கு தெரிந்த சில நண்பர்களிடம் கேட்டதற்கு எங்களுக்கு அப்படி எதுவும் ஆகவில்லை என்றார்கள். அப்ப இந்த கொடுமை நமக்கு மட்டும்தானா? இதை எப்படி தீர்ப்பது என்ற குழப்பத்திலேயே இருந்தேன்.இதற்கிடையில் பதிவர் சந்திப்பு (டிசம்பர்27, 2008) தி.நகர். நேடசன் பூங்காவில் நடைபெறும் என்ற அறிவிப்பு ஆதிசாவின் வலைப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு அங்கு சென்றேன். நான் செல்லும் முன்பே சந்திப்பு நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டதால் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள முடியாமல் அமைதியாக நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டிருந்தேன். என்னருகே அமர்ந்திருந்த ஒருவர்(கார்க்கி என்று பின்பு விசாரித்து தெரிந்து கொண்டேன்) என்னிடம் மெல்ல பேச்சு கொடுத்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரிடம் என் பிரச்சனையை சொன்னேன். அவர் 'தமிழ் எழுதி' கொண்டு எழுதினால் இந்தப்பிரச்சனை வராது என்றார். சரி, ஒரு புதிய ஐடியா கிடைத்திருக்கிறது என்று சந்தோசமாக சென்றேன். ஆனால் எனக்கு இதிலும் தோல்வியே! சரி இனியும் பொறுப்பதில் அர்த்தமில்லை நாமே நோண்டிப்பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன். இடுகைப்பெட்டியில் இருக்கும் html திருத்து என்றதன் மேல் கிளிக் செய்தேன். ஏதோ மாற்றம் தெரிந்தது. பிறகு கவிதையில் தேவைப்பட்ட இடத்தில் வைத்து என்டர் தட்ட என் முயற்சி வெற்றி பெற்றது.உங்களில் யாருக்கேனும் இந்தச் சிரமம் இருந்ததா?

8 comments:

Mahesh said...

அட... நீங்களும் நம்ம கச்சிதானா..

நமக்கும் மொத கொஞ்ச நாளைக்கு ரொம்ப சிரமா இருந்துது.. அப்பறம் புதுகை அப்துல்லா அண்ணனீ-கலப்பையை பத்தி சொல்ல அதை நிறுவுன பிறகு பிரச்னையே இல்லை.

Unknown said...

எனக்கு அதுமாதிரியான பிரச்சணையேதும் வரவில்லை. (எனக்கு கவிதை எழுதத்தெரியாதுன்னு இதவிட நாசுக்கா சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன்)

- சென்னைத்தமிழன்

குடந்தை அன்புமணி said...

\\அட... நீங்களும் நம்ம கச்சிதானா..

நமக்கும் மொத கொஞ்ச நாளைக்கு ரொம்ப சிரமா இருந்துது.. அப்பறம் புதுகை அப்துல்லா அண்ணனீ-கலப்பையை பத்தி சொல்ல அதை நிறுவுன பிறகு பிரச்னையே இல்லை.\\

புதுகை அப்துல்லா அண்ணனோட வலைக்கு கிளம்பிட்டோம்ல.

குடந்தை அன்புமணி said...

\\(எனக்கு கவிதை எழுதத்தெரியாதுன்னு இதவிட நாசுக்கா சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன்)\\
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். உங்க சங்க மாநாட்டு கவிதையை நான் படிச்சிருக்கேன். தொடர்ந்து முயற்சி பண்ணுங்க பாஸ்!

நட்புடன் ஜமால் said...

இப்படி பிரச்சனைகள் வந்ததில்லை.

வேறு ஏதேனும் பிரச்சனைகள் உண்டா சொல்லுங்கள்

தீர்வை தேடுவோம்.

நட்புடன் ஜமால் said...

ஆனால் கவிதை என்று எழுத

இதுவரை பெரும் பாடு தான்

ஒன்னும் வரலை.

இதுக்கு ஏதும் வழி இருக்கா ...

குடந்தை அன்புமணி said...

தங்களின் வருகைக்கு நன்றி ஜமால்! கவிதை நிறைய படியுங்கள். நிச்சயம் உங்களுக்கும் கைவரப்பெறுவீர்கள். தமிழ்மணம் வழங்கும் கருவிப்பட்டை நிறுவ பெரிதும் முயற்சி செய்தேன். டெம்பிளேட் மாற்றி பார்க சொன்னார்கள். ஆனாலும் முயற்சி வீண். 'நமது குரல்' வலைத்தளத்தில் கமெண்ட் பகுதிக்கு சென்றால்தான் தெரிகிறது. என்ன செய்ய?

ஆதவா said...

எனக்கும் இதே பிரச்சனை இருந்தது... ஆனால் அதனை உடனடியாக தீர்த்துக் கொண்டேன்... இரண்டாவது நான் HTML மோடில் எழுதுவது கிடையாது....

எப்படியோ தெரிந்துகொண்டீர்கள்... இல்லாவிட்டால் அதகளம்தான்....

நன்றி பகிர்வுக்கு

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...