Sunday 29 March, 2009

பட்டாம்பூச்சி விருது யார் யாருக்கு?


பட்டாம்பூச்சி விருது கொடுத்து எனக்கு மரியாதை செய்த ஹரிணி அம்மா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிக்கொள்கிறேன். அடுத்து நான் மூன்று நண்பர்களுக்கு தரவேண்டும். பல நண்பர்களுக்கு தரலாம் என்று சொல்லியிருந்தால் எனக்கு பிடித்த அனைவருக்கும் வழங்கியிருக்கலாம். மூன்று நபர்கள் என்று விதிமுறை உள்ளதால் மிகவும் சிரமப்பட வேண்டியதாயிற்று.(யார் இந்த விருதுக்கு ஆதி மூலம்? தயவு செய்து தெரியப்படுத்தலாம். நானும் அறிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.)

முதலில் நான் தேர்ந்தெடுத்துள்ளது...
கோமா அவர்கள். வலைச்சரத்தை அவர் தொகுத்து அளித்த பாங்கில், அவரின் ரசிகனாகிவிட்டேன். நல்ல ரசனைக்கார அம்மணி. நீங்களும் அவரின் ஹா..ஹா..ஹாஸ்யம் வலைத்தளத்திற்கு சென்று ரசிக்க வேண்டுகிறேன்.

அடுத்து...
நண்பர் கோ.ரவிசங்கர்.
இவர் ஹைக்கூவில் கரைகண்டவராயிருக்கிறார். இவரின் பல ஹைக்கூக்கள் பிரமிப்பாய் இருக்கிறது. பதிவர்களையும் ஹைக்கூ எழுதலாம் என்று அழைக்கிறார். சமீபத்தில்தான் அறிமுகம். ஹைக்கூவால் என்னை ஈர்த்துவிட்டவர். ஹைக்கூ பிரியர்கள் அவசியம் இவரது ரவி ஆதித்யா
வலைக்கு சென்றுவாருங்கள்.

அடுத்து இவரும் ஒரு கவிநண்பர்தான்...
ஆ.முத்துராமலி்ங்கம்.
பதின்மரக்கிளை, தெருவிளக்கு, தை என மூன்று வலைத்தளங்களில் கவிதைகள் எழுதிவருகிறார். அருமையான கவிதைகள் படைக்கும் கவி்ஞர். இவரைப்போல நீண்ட கவிதைகள் எழுத நானும் முயல்கிறேன்.... ம்! நீங்களும் வாசித்துப்பாருங்கள்.

பட்டாம்பூச்சி விருதின் விதிமுறைப்படி உங்கள் தளத்தில் இந்த பட்டாம்பூச்சியை விருதை அலங்கரிங்கச் செய்ய வேண்டும்., பட்டாம்பூச்சியை சொடிக்கினால் இந்த பதிவுக்கு வருமாறு தொடர்பு கொடுத்துவிடுங்கள்.
நீங்கள் உங்களுக்கு பிடித்த மூன்று நண்பர்களுக்கு இந்த விருதை அளித்திடவேண்டும். அவ்வளவுதான்!

14 comments:

Unknown said...

நன்றி அன்பு மணி.

எனக்கு ஏற்கனவே ஸ்வாமி ஓம்காரால்
வழங்கப்பட்டு அன்புடன் மறுத்து
விட்டேன்.அங்குஎன் பின்னூட்டத்தைப்
பார்க்கவும்.

மரியாதைக்கு நன்றி.

Suresh said...

வாழ்த்துகள்..
விருது கொடுத்தவருக்கும் பெற்றவர்களுக்கும்...

goma said...

நன்றி குடந்தை அன்பு மணி.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

வழங்கியவருக்கும்

பெற்றவர்களுக்கும்.

Raju said...

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

ஆ.சுதா said...

நன்றி அன்புமணி.
எனக்கும் இப்பட்டாம்பூச்சி கிடைக்குமென நம்பவில்லை
மிக்க நன்றி.

ஆதவா said...

வாழ்த்துக்கள் மூவருக்கும்...

முத்து பழக்கமானவர்

நேரம் கிடைத்தால் மற்ற இருவரையும் சந்திக்கிறேன்

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் அன்பு.

மேன் மேலும் விருது பெற வாழ்த்துகள்.

Anonymous said...

வாழ்த்துகள்..
விருது கொடுத்தவருக்கும் பெற்றவர்களுக்கும்

kuma36 said...

வாழ்த்துக்கள் மூவருக்கும்

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள்
விருது பெற்றவர்களுக்கு.

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..

குடுகுடுப்பை said...

நிறுத்துங்கப்பா இந்த பட்டாம் பூச்சியை
(மாற்றுக்கருத்துக்கு மன்னிக்கவும்) இதோ யாரோ கிளப்பிவிட்ட MLM பட்டாம்பூச்சி மாதிரி இருக்கு

குடந்தை அன்புமணி said...

//குடுகுடுப்பை said...
நிறுத்துங்கப்பா இந்த பட்டாம் பூச்சியை
(மாற்றுக்கருத்துக்கு மன்னிக்கவும்) இதோ யாரோ கிளப்பிவிட்ட MLM பட்டாம்பூச்சி மாதிரி இருக்கு//


யார் இந்த விருதுக்கு ஆதி மூலம்? தயவு செய்து தெரியப்படுத்தலாம். நானும் அறிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கிறேன்.)

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...